நீட் தேர்வு : ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் வரவில்லை- துரைமுருகன்

Published by
Venu
  • தமிழக சட்டப்பேரவையில் நேற்று  நீட் தேர்வு தொடர்பான விவாதம்  நடைபெற்றது.
  • ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சில மாணவர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றது. மேலும்  நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நேற்று  நீட் தேர்வு தொடர்பான விவாதம்  நடைபெற்றது.இந்த விவாதத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசுகையில்,நீட் விவகாரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு நீங்கள் செய்வது மிகப்பெரிய துரோகம் ஆகும் என்று பேசினார்.இதற்கு பதில் அளித்து பேசிய,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசின் நிலைப்பாடு துரோகம் என்றால், அந்த துரோகத்திற்கு விதை போட்டது காங்கிரஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக பொருளாளரும் ,சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் பேசுகையில், ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர்.மறைந்த முதமைச்சர்  ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது என்று  துரைமுருகன் பேசினார்.

Published by
Venu

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

6 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

8 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

10 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

10 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

10 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

11 hours ago