வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் – சரத்குமார் அறிக்கை

Default Image

வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சமத்துவம் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி ,  வரும் 19ம் தேதி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வேட்புமனு தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிலும் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்கள் தான் உள்ளது. இதில் தற்போது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல், வேட்புமனு தாக்கல் செய்ய முடியவிலை என கூறி, வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin