ஆளுநரின் பரிசீலனையில் நீட் விலக்கு மசோதா…!

Default Image

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வு எதிராக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக சட்டசபையில் செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தற்போது கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்