நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – முக ஸ்டாலின்.
நாடு முழுவதும் திட்டமிட்டபடி நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும், நடப்பாண்டு தேர்வு நடந்து முடிந்தது. இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல மாவட்டங்களில் இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உண்ணவிரோதம் போராட்டங்கள் நடத்தி, அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு.
எனினும், சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவைக் கைவிட்டு, மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், மருத்துவ கல்வி கனவினை தவிர்க்கும் பலிபீடமாக நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும், மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் கல்நெஞ்சத்துடன் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…