இயற்கை மரண உதவித்தொகை , ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு ..!

Published by
murugan

பழங்குடியினருக்கு வழங்கப்படும் இயற்கை மரண உதவித்தொகை மற்றும், ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு.

பழங்குடியினர் நல இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், பழங்குடியினர் நல வாரியம் 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை. மூக்குக் கண்ணாடிகள் வாங்கிட உதவித்தொகை ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும். அனைத்து நல வாரியங்களாலும் இதேபோன்று உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சீர் மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி உதவி ரூ.20,000 ஆகவும், ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ5,000 ஆகவும் உயர்த்தி வழங்குவது போலவே பழங்குடியினர் நலத்துறையிலுள்ள பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ5,000 லிருந்து 20,000 ஆகவும், அன்னாரின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. அதனடிப்படையில், பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி  தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

1 hour ago
பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

2 hours ago
வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

3 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

3 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

4 hours ago

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…

4 hours ago