அமித்ஷாவை தொடர்ந்து நட்டா தமிழகம் வரத் திட்டம் ! தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

Published by
Venu

நவம்பர் 21-ஆம் தேதி அமித்ஷா தமிழ்நாடு வந்த நிலையில் ஜே.பி.நட்டா தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வந்தது  முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பு நிலவி வந்தது.இதனால் அதிமுக -பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் செய்திகள் உலாவந்தது. இதனிடையே அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி  வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்பு ,உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வரும், துணை முதல்வரும் நேரில் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் தேர்தல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது.அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியது.ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.வருகின்ற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.நவம்பர் 21-ஆம் தேதி அமித்ஷா தமிழ்நாடு வந்த நிலையில் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார்.தமிழகம் வரும் அவர் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார் என்றும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago