பிபிஇ கிட் அணிந்து வாக்களித்தார் நாசர்..!

Default Image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து வாக்களித்துள்ளார். 

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து வாக்களித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்