நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படுத்தவாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மாணவி அபிநயாவிற்கு தமிழக அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துக்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதனிடையே நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தை சேர்ந்த மாணவி அபிநயா, கோஃபார் குரு என்ற ஆன்லைன் தேர்வின் மூலம் நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாமல் தவித்து வந்தார். இது குறித்து செய்தி வெளியான நிலையில் பரப்புரைக்கு நாமக்கல் சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி, மாணவியின் குடும்பத்தினரை அழைத்து 2 லட்சம் ரூபாயை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…