நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், நாளைய தினம் நடைபெற இருந்த நந்தினியின் திருமணம் வேறு ஒரு நாள் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நந்தினியின் கணவராக இருக்கும் குணா தெரிவித்துள்ளார்.
2004 ம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று கூறி நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் மறுத்து விட்டனர்.
நீண்ட நாட்களாக மதுவுக்கு எதிராக போராடும் நந்தினி அவர்களுக்கு நாளைய தினம் ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்க, சிறையில் இருக்கும் இருவரையும் மீட்டு வர நந்தினியின் சகோதிரி மற்றும் கணவராக வர இருக்கும் குணா ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் , ஜூலை 9ம் தேதி வரை ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமை உருவாகியது . இந்த நிலையில், நந்தினி சிறையில் இருந்து வெளி வந்த பின்னரே திருமணம் நடக்கும் என்று மணமகன் குணா கூறியுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…