புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் பிரபு என்பவர் ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்துள்ளார். அவர் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய ஆட்டோவை வீடாக மாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், குறைந்த இடத்தில் தேவைப்படும் வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீட்டில் சமையல் செய்யும் இடம், படுக்கை அறை, கழிப்பிடம், துணிகளை காயவைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும், ஆட்டோவின் மேல் பகுதியில் மொட்டை மாடியில் உள்ள வசதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது. பின்னர் வீட்டிற்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய மின் சக்தி (solar system) மூலமாக தயாரிக்கப்படுகிறது.
மேலும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் சென்று தொழில் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு இந்த வீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொறியியல் பட்டதாரி அருண் பிரபு கூறிகிறார்.
தற்போது பொறியியல் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என கூறப்படும் வேலையில் ஆர்வத்துடன் கல்வி கற்றால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக இந்த ஆட்டோ வீடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…