நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செய்த செயல்.! பதறிப்போன நிர்வாகிகள்.!

Published by
மணிகண்டன்

Election2024 : கரும்பு விவசாயி சின்னம் பொரித்த துண்டு அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா.

மக்களவை தேர்தல் வேலைகள் தமிழகத்தில் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது. அதனால் இன்றே தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் கார்த்திகா என்பவர் போட்டியிடுகிறார். கோவை சேர்ந்த B.E பட்டதாரியான இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை தேர்தல் பரப்புரையாளராக உள்ளார். இவர் இன்று நாகப்பட்டினம் மக்களவை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது, அவர், கரும்பு விவசாயி சின்னம் பொறித்த துண்டை அணிந்து வந்துவிட்டார். ஏனென்றால் , கரும்பு விவசாயி சின்னமானது தற்போது நாம் தமிழர் கட்சி தேர்தல் சின்னமாக இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் தேர்தல் ஆணையம் பொது சின்னம் அறிவிக்கவில்லை. அதுவும் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு அளிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் கார்த்திகா அணிந்து வந்த துண்டை பார்த்த சக நிர்வாகிகள். உடனடியாக துண்டை அகற்ற சொல்லி, பின்னர், சீமான் முகம் பொரித்த துண்டை கொடுத்தனர். அதனை அணிந்து கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார் கார்த்திகா.

Recent Posts

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

23 minutes ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

2 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

3 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

4 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

4 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

5 hours ago