“அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும், முருகனும் பேசப்போகிறார்கள்?”- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Published by
Surya

நளினி மற்றும் முருகன் அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் முருகனின் தாய், சகோதரியிடம் முருகனும், நளினியும் பேச அனுமதி கோரி கோரிக்கை வைத்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, “நளினி மற்றும் முருகன் வெளிநாட்டில் உள்ள அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? எனவும், குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறை?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு தமிழக அரசு தரப்பில், “2 பேரையும் பேச அனுமதிப்பதை பன்னோக்கு விசாரணை முகமை விசாரணைக்கு இடையூறாக அமையும்” என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் விசாரிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

38 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

1 hour ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago