நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி ! வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் பதவியேற்கும் தேதி அறிவிப்பு

Default Image

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் வரும் 29-ஆம் தேதி பதவியேற்கின்றனர்.
கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன்  மற்றும் நாங்குநேரியில் மற்றொரு அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணனும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் வரும் 29-ஆம் தேதி பதவியேற்கின்றனர். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்