நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இன்று நாகர்கோவிலில் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்தார். அதன் பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் சபாநாயகர் தனபால் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.இதில் முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், எல்லைகள் மறுசீரமைப்பு பணி முடிந்ததும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.மேலும் ரூ.120 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டப்படும்.ஒகி புயலின் போது மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மீனவர்கள், பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…
பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின்…
சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும்…