நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மறைவு.! முதல்வர் இரங்கல்.!

Published by
மணிகண்டன்

Nagapattinam M.P : நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் இன்று உடல்நல குறைவால் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (மே 14) காலையில் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சித்தமல்லி பகுதியை சேர்ந்த M.செல்வராஜ், சிறு வயது முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு சிறு சிறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர், 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார்.

அதன் பிறகு, 1996, 1998 மற்றும் கடந்த 2019 தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்.பியாக பொறுப்பில் இருந்துள்ளார். இந்த முறை 2024 தேர்தலில் செல்வராஜ் போட்டியிடவில்லை.

ஏற்கனவே, முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராஜ் அவர்களுக்கு, அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் நாளை  காலை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சுத்தமல்லியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது .

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :

நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும் டெல்டா மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

26 minutes ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

1 hour ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

1 hour ago

காத்திருந்து..காத்திருந்து! ‘விடாமுயற்சி’ பற்றி வாயை திறக்காத அனிருத்! கதறும் ரசிகர்கள்…

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…

2 hours ago

இந்தியாவுக்கு எதிரா எங்களுடைய இந்த வீரர் தான் திருப்புமுனை! ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில்,…

3 hours ago

“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!

சென்னை :  திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…

3 hours ago