naam tamilar katchi candidate [file image]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்து வந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக பிளவு காரணமாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், அதிமுகவின் புதிய கூட்டணி எப்படி இருக்கும், பாஜக தனி கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது மீண்டும் அதிமுகவுடன் கைகோர்க்குமா? என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இனிய பொங்கல் இந்திய பொங்கல் ஆகட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இருப்பினும், தமிழகத்தில் 40க்கும் 40 தொகுதிகள் நாங்கள்தான் அபார வெற்றி பெறுவோம் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கூறி வருகின்றனர். இந்த நிலையில், தென்சென்னை தொகுதி வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மீதமுள்ள 39 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. எப்போதும் போல், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …