பெண்களை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்து கொலை செய்யும் குற்றத்திற்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என சீமான் தெரிவித்தார்.
இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மகாகவி பாரதியாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, அறிக்கை விடுக்கிறதோ அதை பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது. நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி என கூறினார்.
திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்ற பெருமை எனக்கு வந்திருக்கிறது. நாங்கள் ஒரு கோட்பாடு வைத்துள்ளோம். எந்த குற்றத்திற்கு மரண தண்டனை கிடையாது. ஆனால் பெண்களை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்து கொலை செய்யும் குற்றத்திற்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது இது எங்கள் கோட்பாடு என தெரிவித்தார்.
நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன். பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது அதுதான் தமிழ் தேசியம் என தெரிவித்தார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…