எக்ஸ்ரே அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நோயாளி ..!

Default Image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளார். மணிகண்டன் மோட்டார் பழுது பார்க்கும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மணிகண்டன்  மனைவி கீதாவுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கீதா டீ வாங்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் திடீரென மணிகண்டன் மாயமானார். ரொம்ப நேரமாக கீதா தேடியும் அவரை காணவில்லை பின்னர் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் ஒருவர் எக்ஸ்ரே அறையில் இறந்து கிடப்பதாக கூறினார்.

அங்கு சென்று பார்த்தபோது மணிகண்டன் இறந்து கிடந்துள்ளார்.பின்னர் பிரேத பரிசோதனைக்கு மணிகண்டன் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains