கலப்பு திருமணம் செய்த காதலர்களை வெட்டி கொன்ற மர்ம நபர்கள்!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் வசித்து வந்தவர் சோலைராஜ்.அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதி.வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்த இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் காதலித்து வருவது ஜோதியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.அவர்கள் இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.ஆனால் அதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே வந்து பார்க்கும் போது இருவரும் உயிர் பிரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனனர்.இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கலப்பு திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai