அமைச்சர் உருவபொம்மையை மேம்பாலத்தில் தொங்கவிட்ட மர்ம நபர்கள்..!

Default Image

மிசா சட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைதானாதை பற்றி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் கடந்த 06-ம் தேதி அதிகாலை 05 மணிக்கு அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மை துாக்கில் தொங்க விடப்பட்டு இருந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.பின்னர் அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை தொங்கவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்