கல்யாண பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல்.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே ஊர்சேரி எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள்தான் சங்கீதா. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தன் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் சகோதரரை அடித்துவிட்டு சங்கீதாவை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முப்பதாம் தேதி சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவை மர்ம நபர்கள் கடத்தி உள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…