முன்னாள் ஜெயில் வார்டனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பல்!

Default Image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வந்தார்.இவர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்துள்ளார்.மேலும் இவர் கடந்த ஆண்டு முன்விரோதத்தால் தன் நண்பர் டேவிடின் காரை தீவைத்து எரித்துள்ளார்.

அப்போது அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்னர் கடந்த மாதம் 10-ம் தேதி ஜாமினில் வெளியில் வந்து தனது வீட்டிற்கு அருகில் மீன் பண்ணை அமைத்து அதை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது மீன் பண்ணைக்கு தனது நண்பருடன் சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது ஆண்டிபட்டி ஏரி அருகே காரில் வந்த மர்மகும்பல் மாதேசை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

இதன் காரணமாக மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாவமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்