ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் – பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தீபாவளியன்று மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது தவறானது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளின்போது தமிழர்கள் மது அருந்தக் கூடாது.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அதை வரவேற்கிறேன்.ஆனால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.நாங்குநேரி தொகுதிக்குள் வந்த வசந்தகுமார் மீது ஏதோ சம்பிரதாயத்திற்கு  வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்