இன்று ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும் முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறோம். இந்த சட்டத்தால் யாரும் பாதிப்படைய கூடாது. அப்படி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தட்டி கேட்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்.
விஜயகாந்த் மற்ற கட்சி தலைவர்களுக்கு உதாரணமாக உள்ளார். அதற்கு சான்று விஜயகாந்த் திரைப்படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை ஏழை ,எளிய மக்களுக்கு தானமாகவும் , பொருட்களாகவும் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் தயாராகி விட்டார்கள். தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியா…? அல்லது தனித்து போட்டியா…? என இப்போதே சொல்ல முடியாது என கூறினார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…