ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்-பிரேமலதா விஜயகாந்த்

Default Image

இன்று ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும்  முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறோம். இந்த சட்டத்தால் யாரும் பாதிப்படைய கூடாது. அப்படி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தட்டி கேட்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்.

விஜயகாந்த் மற்ற கட்சி தலைவர்களுக்கு உதாரணமாக உள்ளார். அதற்கு சான்று விஜயகாந்த் திரைப்படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை ஏழை ,எளிய மக்களுக்கு தானமாகவும் ,  பொருட்களாகவும் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற  சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் தயாராகி விட்டார்கள்.  தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.

சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியா…? அல்லது தனித்து போட்டியா…? என இப்போதே சொல்ல முடியாது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்