எனக்கு வழங்கும் MP சம்பளத்தை ஏழைகளுக்கு நன்கொடையாக தருவேன்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வசந்த குமார் அவர்கள் தனக்கு வழங்கும் சம்பளம் முழுவதையும் ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாங்குநேரி தொகுதியானது காலியாக உள்ளது