மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்! – அண்ணாமலை ட்வீட்

Published by
பாலா கலியமூர்த்தி

‘பரிட்சை’ எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள, மாணவ, மாணவியர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்துகொண்டு வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், ‘பரிட்சை’ – எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. சரித்திரத்தில் இருந்ததுமில்லை. குறைவான மதிப்பெண் (தங்களுடைய கணக்கின்படி), தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள் – ‘உங்கள் வாழ்க்கை உங்களுக்காக ஒரு பெரிய கதவைத் திறப்பதற்கு தயாராக இருக்கிறது’. எனவே, துணிவோடு, தைரியமாக பயணியுங்கள்! என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

2 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

3 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

3 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

3 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

4 hours ago

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…

4 hours ago