திருச்சியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி 13 கோடி மதிப்புள்ள 29 கிலோ எடை கொண்ட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உள்ள முருகனை நேற்று முன்தினம் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.நேற்று நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் முருகன் கூறுகையில் , லலிதா ஜுவல்லரி துளையிட எங்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது.
பின்னர் கொள்ளையடித்த நகையை மதுரையிலுள்ள கணேசன் வீட்டிற்கு சென்று கொண்டு மெஷினில் எடை போட்டு சுரேஷுக்கு 6 கிலோவும் , கணேசனுக்கு 7 கிலோ கொடுத்து விட்டு பின்னர் நானும் சுரேஷும் நீடாமங்கலம் வந்தோம் .காரில் வரும்போதே செல்போன் மூலமாக மணிகண்டனை நீடாமங்கலம் வரச்சொன்னேன்.சுரேசை நீடாமங்கலத்தில் இறக்கிவிட்டு நான் சென்னை புறப்பட்டேன்.
சுரேஷும் , மணிகண்டனும் அந்த நகையை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்லும்போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். இந்த செய்தியை அறிந்த நான் சென்னை வரை நகை எடுத்துக்கொண்டு சென்றால் போலீசில் மாட்டிக் கொள்வோன் என எண்ணி பெரம்பலூரில் உள்ள வனப்பகுதியில் சிறிது அளவு நகையை புதைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.
மணிகண்டன் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் இருந்தால் நான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக ஆகி இருப்பேன் .எனது ஆசை அரசியல்வாதி ஆக வேண்டும் என்பது தான் நேரடியாக அரசியல் சென்று வெற்றி பெறுவது ரொம்ப சிரமம். அதுவே தமிழ் சினிமாவில் இருந்து பிறகு ஏதாவது ஒரு கட்சியில் சேரவேண்டும் என நான் திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் மணிகண்டன் சிக்கியதால் வேறு வழியில்லாமல் நானும் சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சில போலீசாருக்கு நான் பங்கு கொடுத்து உள்ளேன். அவர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. வேலூர் சிறையில் தான் கணேசனும் , எனக்கும் பழக்கம். கணேசன் நகைகளை உருக்கி விற்பதில் கில்லாடி என்பதால் அவரை பங்குதாரராக நாங்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஏற்றுக் கொண்டோம்.
நாங்கள் ஏழை வீட்டிலும் , கடையிலும் கொள்ளை அடிக்க மட்டும் நகைக்கடை மற்றும் தொழிலதிபர் வீட்டில் தான் கொள்ளை அடிப்போம் என கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…