தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என சீமான் ட்வீட்.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…