எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்படுவதாக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் பின்னர் திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசுகையில் , என்னை வளர்த்தவர் எம்ஜிஆர் . என் தலைவர் கருணாநிதி. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர்.இந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றியோடு இருக்கும்.திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்றும் துரோகம் நினைக்க மாட்டேன் என்று பேசினார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…