எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் – துரைமுருகன்

Default Image

எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்படுவதாக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன் பின்னர் திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசுகையில் , என்னை வளர்த்தவர் எம்ஜிஆர் . என் தலைவர் கருணாநிதி. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர்.இந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றியோடு இருக்கும்.திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்றும் துரோகம் நினைக்க மாட்டேன் என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்