ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓபிஎஸ்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்.!

Default Image

ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். – முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட். 

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 95 வயதான ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவர்கள் இரண்டு நாட்கள் முன்பு உடல் நலக்குறைவால் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கதறி அழுத ஓபிஎஸ் : இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது தாயார் இறந்த செய்தியை அறிந்த ஓபிஎஸ் மருத்துவமனையிலேயே கதறி அழுதார். இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனியிலுள்ள பெரியகுளம் வருகின்றனர்.

முதல்வர் இரங்கல் : தற்போது ஓபிஎஸ் தயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை டிவிட்டர் வாயிலாக பதிவிட்டுள்ளார். அதில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியால் மிகவும் வேதனையடைகிறேன் எனவும்,

ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவும் அந்த டிவிட்டரில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்