விருதுநகரில் 15 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி!

Default Image

விருதுநகரில் 15 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி.

தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, பல திட்ட பணிகளை தொடங்கி வாசித்தார்.

இந்நிலையில், தற்போது விருதுநகரில், ரூ.11.36 கோடி மதிப்பில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற ரூ.28.74 கோடி மதிப்பிலான 30 பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், விருதுநகரில் ரூ.45.36 கோடி மதிப்பில் 8,466 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்