கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட மாணவர்களின் காலத்தை மீட்டு தர வேண்டும் – வைரமுத்து
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மனித குலத்தை மீட்டு தருவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய சவால்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தொடர்ந்து தற்போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயப்படாவில்லை. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டிர்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 172 நாடுகளில், 100 கோடி மாணவர்கள் ஓராண்டு கல்வியை இழந்திருப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும், கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மனித குலத்தை மீட்டு தருவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய சவால் என்றும், அந்த சவாலை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)