முருகனை பழித்துப்பேசியது கண்டிக்கத்தக்கது – ஆர்.எஸ் பாரதி

Default Image

முருகனை பழித்துப்பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து  வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.மேலும் பாஜக இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின்    சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.பின்  எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.இதற்கு பலரும் தங்களது கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறுகையில்,முருகனை பழித்துப்பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.திமுக தலைவரும் இதையே கூறியிருக்கிறார். கறுப்பர் கூட்ட விவகாரத்தில் திமுக மவுனம் காக்கவில்லை. ஏற்கனவே அறிக்கை விடுத்துள்ளோம். திமுகவில் உள்ள ஒன்றரை கோடி பேரில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்