எல் முருகனுக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரியலூரில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்திருந்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலர் எல் முருகனுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறிருந்தது குறித்த கேள்விக்கு, அவருக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என மயிலாடுதுறையில் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…