லலிதா கொள்ளையில் தொடர்புடைய முருகன் உயிரிழப்பு..!

Default Image

கடந்த ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில்  ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக் கப்பட்டது. பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையை நடத்தியது திருவாரூர் முருகன் என்பது தெரியவந்தது.

முருகன் தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், திருச்சி நகை கொள்ளை வழக்கில் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைய பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்