மறைந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் காண அனுமதி கேட்ட முருகன் ! மறுப்பு தெரிவித்த அரசு

Default Image

மறைந்த தந்தையை காண முருகனுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை மரணமடைந்தார் .

எனவே முருகன் தனது வழக்கறிஞர் மூலமாக
தமிழக முதல்வர் மற்றும் சிறைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதாவது, உயிரிழந்த தனது தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் முருகனின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்