மேயர் உட்பட மூவர் கொல்லப்பட்ட வழக்கு : திமுக பிரமுகர் மகன் கைது

Default Image

திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

மூவரின்  கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால்  இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி  சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில்கொலை  சம்பவம் நடந்த அன்று வீட்டை தாண்டி கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அந்த கார் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனின் கார் என்று கண்டறிந்தனர்.இதனையடுத்து சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். மேலும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்