முக்கியச் செய்திகள்

காதல் திருமண ஜோடி படுகொலை- மேலும் 3 பேர் கைது..!

Published by
murugan

தூத்துக்குடியில் காதல் திருமண செய்த மாரிச்செல்வம் – கார்த்திகா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகா  பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மாரி செல்வம் பெற்றோர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 30-ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் மாரி செல்வமும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொண்டு பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளனர்.

தங்களின் எதிர்ப்பை மீறி கார்த்திகா திருமணம் செய்ததால் அவரின் குடும்பத்தினர் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில் முருகேசன் நகரில் புதிதாக காதல் திருமண செய்த  மாரி செல்வமும், கார்த்திகாவும் ஒரு வீட்டில் இருந்துள்ளனர். நேற்று மாலை 3 பைக்கில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர்.

இதையெடுத்து சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் கார்த்திகாவும், மாரி செல்வம் உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாரிச்செல்வம், கார்த்திகா இருவரின் உடல்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

இந்நிலையில், மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கி ராஜா, ராஜபாண்டி மற்றும் ஒரு சிறுவன் என மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
murugan
Tags: #Thoothukudi

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago