#BREAKING : தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published by
Venu

 தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் போலீசார்  மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர்.

 அந்தவகையில் இன்று தந்தை -மகன் உயிரிழந்த வழக்கை  சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு  பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

 இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேதப்பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

4 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

6 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

7 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

7 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

8 hours ago