காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொலை.!காதல் கணவன் தப்பி ஓட்டம்..!

Published by
kavitha

மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் ஆனது மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் நடந்துள்ளது.இந்த பகுதியை சேர்ந்தவர் அசோக் வயது 32ஆகிறது. இவருடைய மனைவி சுதா வயது 27 ஆகிறது. இருவரும் காதலித்து  திருமணம் செய்து கொண்டவர்கள்.திருமணம் ஆகி ஒரு பெண், மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் மனைவி சுதா வேலை பார்க்கும் இடத்திற்கு  அடிக்கடி சென்று பணம் வாங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்  சுதா வேலை தொடர்பாக  கோயம்புத்தூர் சென்றுள்ளார் தான் கோயம்புத்தூர் செல்வது குறித்து கணவரிடம் கூறாமல் சென்றுள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த அசோக் தனது 2 குழந்தைகளை தன் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு விட்டு வந்துள்ளார். இதற்கிடையில் கோயம்புத்தூரில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுதா குழந்தைகளை அழைத்து வரும்படி  அசோக்கிடம் கூறியுள்ளார்.அசோக் தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.குழந்தைகள் எங்கே என்று மனைவி சுதா கேட்க கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு உச்சக்கட்டத்திற்கு சென்ற நிலையில் கணவன் தன்னுடைய மனைவி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் இக்கொலை குறித்து தகவலறிந்து வந்த திருநகர் போலீசார் இறந்து கிடந்த சுதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அசோக்கின் பெற்றோர்களை  காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அசோக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

12 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

46 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

51 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago