முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

Published by
பால முருகன்

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது எனவும், சமீபகாலமாக கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் .

அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார். அவரை போன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூற மாட்டேன் புள்ளிவிவரங்களுடன் சட்டசபையில் தெரியப்படுத்துவேன்.  கடந்த 2024’ல் மட்டும் 4,571 சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எங்கேயாவது குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் மேற்கொள்ளப்படும் துரித சம்பவங்கள் ஒருபுறம், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என இருவழியிலும் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. தொடர் குற்றவாளிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைதுகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதைப்போல, கொலை சம்பவங்களும் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக கொலைகள் நடந்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. அதைப்போல, அதற்கு அடுத்த ஆண்டாள் 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன.

ஆனால், கடந்த 2024 ஆண்டில் தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தூத்துக்குடி சம்பவம், சாத்தான்குளம் சம்பவத்தை எல்லாம் பழனிசாமி மறந்துவிட்டார். அவரை மாதிரி ‘டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லும் ஆட்சி அல்ல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Published by
பால முருகன்

Recent Posts

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

4 hours ago

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

4 hours ago

KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…

6 hours ago

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

6 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

7 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

8 hours ago