முரசொலி நிலம்: பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!

Published by
murugan

சென்னை கோடம்பாக்கத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளது.  கோடம்பாக்கத்தில் உள்ள 1825 சதுர அடி கொண்ட முரசொலி அலுவலகம் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம். அந்த பஞ்சமி நிலத்தில் தான் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ளது என கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக  நிர்வாகி  சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு கடந்த 2019 நவம்பர் மாதம் தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் விசாரணை நடத்த தடை விதிக்கவும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது” பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது பட்டியலின ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் , ஆனால்  உரிமையியல் வழக்கில்  நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வு காண முடியும் என முரசொலி அறக்கட்டளை தரப்பில் தெரிவித்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “முரசொலி அலுவலக நிலத்துக்கு உள்ள பட்டா, விற்பனை பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளரை முடிவு செய்வதற்காக இறுதி ஆதாரம் இல்லை.

கோடநாடு வழக்கு: விசாரணைக்காக நாளை ஆஜராகும் சயான்..!

எனவே ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என கூறினார்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக கூறினார்.  இந்நிலையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த புகாரில், தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் விசாரணை நடத்தலாம் எனவும் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய பழைய நோட்டீசை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது எனவும் புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தை பெற்று விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago