கிராமசபை போல நகரசபை, மாநகரசபை கூட்டங்கள் நடத்தப்படும்.! – தமிழக அரசு அறிவிப்பு.!

Default Image

கிராமசபை போல நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுவது போல நகர சபை கூட்டங்கள், மாநகர சபை கூட்டங்கள் மக்களால் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதில், வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் ஆலோசனை கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதில், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் நடைபெறும் வார்டுசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதற்காக, முன்னேற்பாடுகளை பம்மல் பகுதிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்