முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்.!

Default Image

முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை, எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுகையில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி , தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சென்னை மற்றும் கோவை என இரு வழக்குக்கள் எஸ்.பி.வேலுமணி மீது பதியப்பட்டது.

தன் மீது போடப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, எஸ்.பி.வேலுமணி சார்பில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உய்ரநீதிமன்றம் பொறுப்பு நீதிபதி துரைசாமி தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை, எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்