தமிழக முதல்வர் அவர்களின் தாயார் காலமானார்….

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் திருமதி. தவசாயி அம்மாள் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக  காலமானார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாருமான தவசாயியம்மாள் அவர்கள்  93 வயது மற்றும் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே சிகிச்சைக்காக சேலத்திலுள்ள லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று (திங்கள் கிழமை) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் காலமானார்.

காலமான தவசாயியம்மாள் அவர்களுக்கு பழனிச்சாமி, கோவிந்தராஜ் என்ற இரு மகங்களும், ரஞ்சிதம் என்ற விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror