#BREAKING: எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு ..!

Default Image

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நேற்று எம்.ஆர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது.

அவர் அமைச்சராக இருந்த போது எவ்வாறெல்லாம் பணத்தை வங்கிகளில் மாற்றி இருக்கிறார் என்பது குறித்து சோதனை செய்ய முடிவு செய்து எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்து சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்