தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்பில் இருந்து தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பார்வையிட்டனர்.
அப்போது F.C.I குடோன் எதிர்புறம் உள்ள திரு.வி.க நகர் பகுதியில் வெள்ளநீர் வடியாமல் தண்ணீர் தேங்கி நின்று இருந்தது. அந்த வெள்ள நீர் வெளியேறும் பகுதியான மீன் வளக்கல்லூரி அருகில் சென்று பார்வையிட்டனர். அங்கு வெள்ளநீர் வெளியேறுவதற்க்கு சில இடங்களில் தடைகளாக இருந்த மண்னை அகற்றி விட வேண்டி இருந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆணையர் தினேஷ்குமார் பேசினார்.
அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தடையாக இருந்த மண்னை சுத்தப்படுத்தி வெள்ளநீர் வெளியேற செய்தனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தண்ணீர் வெளியேறுவதற்க்கு வழிவகை செய்ய உதவினர்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…