தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்பில் இருந்து தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பார்வையிட்டனர்.
அப்போது F.C.I குடோன் எதிர்புறம் உள்ள திரு.வி.க நகர் பகுதியில் வெள்ளநீர் வடியாமல் தண்ணீர் தேங்கி நின்று இருந்தது. அந்த வெள்ள நீர் வெளியேறும் பகுதியான மீன் வளக்கல்லூரி அருகில் சென்று பார்வையிட்டனர். அங்கு வெள்ளநீர் வெளியேறுவதற்க்கு சில இடங்களில் தடைகளாக இருந்த மண்னை அகற்றி விட வேண்டி இருந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆணையர் தினேஷ்குமார் பேசினார்.
அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தடையாக இருந்த மண்னை சுத்தப்படுத்தி வெள்ளநீர் வெளியேற செய்தனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தண்ணீர் வெளியேறுவதற்க்கு வழிவகை செய்ய உதவினர்கள்.
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…