இன்று திமுகவின் சுற்றுசூழல் அணிக்கு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணலை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
திமுகவின் துணை பொதுச்செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி எம்.பி, கனிமொழி கருணாநிதி அவர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு பணிகள் மற்றும் அரசியல் பணிகளையும், தங்கள் கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார்.
அவருக்கு கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மகளிர் அணி. மகளிர் தொண்டரணி ஆகிய பிரிவுகளின் பொறுப்பாளர் எனும் பொறுப்புகளும் கடந்த மதம் டிசம்பர் 28ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களால் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து, திமுகவின் சுற்றுசூழல் அணிக்கு பொறுப்பாளர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் நிகழ்வை இன்று கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் துணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நேர்காணல், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த நேர்காணலூக்காக வைக்கப்பட்ட பதாகையில், சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளரான கனிமொழி அவர்களில் புகைப்படம் இடம்பெறவில்லை, ஆனால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் உள்ளது. இதனை கனிமொழி பொருட்படுத்தாமல், திராவிட முன்னேற்றக் கழக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நேர்காணலில் பங்கேற்றார்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…